உள்ளூர் செய்திகள்

குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிகள் மண்ணால் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சாலையை சீரமைக்க கோரிக்கை

Published On 2022-07-07 10:40 GMT   |   Update On 2022-07-07 10:40 GMT
  • திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது.
  • திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகு சாலை போடாமல் மண்ணால் மட்டுமே குழிகள் மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

திருப்பூர் சாமுண்டிபுரம் பிரதான சாலையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிகள் மண்ணால் மூடப்பட்டுள்ளது. மிகுந்த போக்குவரத்து நெரிசலான அப்பகுதியில் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே விரைவில் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News