உள்ளூர் செய்திகள்

உழவர் சந்தை நுழைவாயிலில் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

உடுமலை உழவர் சந்தையில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீர் - விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு

Published On 2022-10-11 05:12 GMT   |   Update On 2022-10-11 05:12 GMT
  • உழவர் சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
  • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

உடுமலை :

உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

உழவர் சந்தை அமைந்துள்ள கபூர்கான் வீதியில், போதிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலையில், நேற்று முன்தினம் பெய்த சிறிய அளவிலான மழைக்கு கூட தாங்காமல் வெள்ள நீர் தேங்கியுள்ளது.குண்டும், குழியுமான ரோட்டில் பல இடங்களில் குளம் போல், மழை நீர் தேங்கியுள்ளது. அதே போல் உழவர் சந்தை நுழைவாயில் மற்றும் வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.வளாகத்தில், குறைந்த அளவே கடைகள் உள்ள நிலையில் பெரும்பாலான விவசாயிகள் வளாகத்தில் தரையில் வைத்தே காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதனால் காய்கறிகள் மண், சேறு என பாதிப்பதோடு, வளாகத்திற்குள் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்கு வரும் மக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, உழவர் சந்தை ரோட்டில் மழை நீர் வடிகால் வசதி மற்றும் குண்டும், குழியுமான ரோட்டை சரி செய்யவும், உழவர் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்காமலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News