search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Market"

    • உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகளை அவர்களின் சொந்த வாகனங்களில் கொண்டு வந்து உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதேப்போல் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயிகளின் வாகனங்களை வெளியில் நிறுத்தக்கூடாது தங்களுக்கு வியாபாரம் செய்ய சிரமமாக இருப்பதாக கூறி வெளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இருத்தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் உழவர் சந்தை விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சந்தைக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளின் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும், வெளியில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். 

    • சரோஜா வைத்திருந்த ரூ.500 பணம் திடீரென காணாமல் போனது.
    • மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மூதாட்டி சரோஜா தவற விட்ட பணத்தை சந்தை பகுதியில் வைத்து கண்டுபிடித்து அதனை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 60). இவர் நேற்று காலை தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்திருந்தார்.

    அந்த சமயத்தில், அவர் வைத்திருந்த ரூ.500 பணம் திடீரென காணாமல் போனது. இது குறித்து அவர் சந்தை நிர்வாக அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (25) என்கிற மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மூதாட்டி சரோஜா தவற விட்ட பணத்தை சந்தை பகுதியில் வைத்து கண்டுபிடித்து அதனை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

    அதனை உதவி நிர்வாக அலுவலர்கள் சிவசங்கர், பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் மூதாட்டி சரோஜாவிடம் ஒப்படைத்தனர். கூலித் தொழிலாளியின் இந்த நேர்மையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் காய்கறிகள் மற்றும் தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.இன்று காலை கடலூரை சுற்றியுள்ள விவசாயிகள், காய்கறிகள் மற்றும் வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    கடலூர் காரைக்காட்டை சேர்ந்த மூதாட்டி கோவிந்தம்மாள், பாலூர் பகுதியில் இருந்து வாழை இலைகளை அறுத்து அதனை கட்டுகளாக கட்டி விற்பனைக்காக உழவர் சந்தைக்கு கொண்டு வந்திருந்தார். அப்போது வாழை இலை கட்டுகளில் இருந்து பாம்பு வெளிவந்து, மீண்டும் உள்ளே சென்று விட்டது. இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார். வாழை இலை கட்டுகளை பிரித்துப் பார்த்து, அதற்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தார். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
    • சந்தையை விரிவாக்கம் செய்து கடைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது. சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நாள்தோறும் புத்தம் புதியதாக காய்கறிகள் கிடைப்பதால் உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    இதன் காரணமாக உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை சீரான முறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 7 லட்சத்து 28 ஆயிரத்து 225 கிலோ காய்கறிகளும், 90 ஆயிரத்து 920 கிலோ பழ வகைகளும் ஆக மொத்தம் 8 லட்சத்து 19 ஆயிரத்து 145 கிலோ வரத்து வந்துள்ளது. அதன்படி ரூபாய் 3 கோடியே 24 லட்சத்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகி உள்ளது.

    சந்தைக்கு 2 ஆயிரத்து 274 விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்துள்ளனர். அதை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 3 பொதுமக்கள் வாங்கி சென்று உள்ளனர். காய்கறிகள், பழங்கள் தரமாக கிடைப்பதால் உழவர் சந்தைக்கு வருகை தருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இதனால் மேலும் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து கடைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தி மக்களின் நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது.
    • அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர்

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் மற்றும் அதிகாரிகள் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து குறைகளை உரிய முறையில் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதில் சந்தை நிர்வாக அலுவலர், துணை வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தக்காளி, கீரை உள்ளிட்ட ரகங்களை பறித்து கொண்டு வந்து விற்பனை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது.
    • உழவர்சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் மிகவும் பிரபலமானது தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை. இங்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யும் வகையில் உழவர் சந்தை அமைக்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகிறது. இச்சந்தைக்கு பல்லடம், பொங்கலூர், கொடுவாய், கோவில்வழி, ஊத்துக்குளி, அவினாசி போன்ற ஊர்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் தக்காளி, கீரை உள்ளிட்ட ரகங்களை பறித்து கொண்டு வந்து விற்பனை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதனால் திருப்பூர் மாநகர மக்களின் அன்றாட தேவையை இந்த உழவர் சந்தை பூர்த்தி செய்து வருகிறது.

    மேலும் திருப்பூர் டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிறு மளிகை கடைக்காரர்கள் மற்றும் மொத்த காய்கறி கடைக்காரர்கள் தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் உள்ள காய்கறிகளை கொள்முதல் செய்து வருவது வழக்கம். தற்போது திருப்பூர் பழைய பஸ் நிலையம் மேம்பாலம் இறக்கத்தில் இருந்து தென்னம்பாளையம் மார்க்கெட் வரை சாலையோர கடைகள் பெருகிவிட்டது. இதனால் அவசர அவசரமாக வரும் வியாபாரிகள் சாலையோர கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி பழங்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதிப்பதாக விவசாயிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தி, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கினர். அதாவது சாலையோரம் உள்ள கடைகளை மாநகராட்சி மூலம் அகற்றினர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் சாலையோர கடைகள் புற்றீசல் போல வரும். இப்படியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் உழவர் சந்தையில் தக்காளி வாங்குவதற்காக உள்ளே செல்லும் போது மோட்டார் சைக்கிளை பாதுகாப்பாக நிறுத்த முன் பக்க நுழைவு வாயிலில் கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது. இதன்மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கு வசூல் செய்யும் கட்டண அதிகாரிகள் தான் ெபாறுப்பாகிறார்கள். அத்துடன் பார்க்கிங் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மீது ஒவ்வொரு முறையாக கொள்முதல் செய்யும் தக்காளிகளை கொண்டு வந்து வைத்து விட்டு பின்னர் திரும்ப வாங்க செல்வது வழக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தக்காளியை ஒரு பையில் வாங்கி வைத்து விட்டு செல்வார்கள்.

    இந்தநிலையில் திருடுவதற்காக ஒரு கும்பல செயல்படுகிறது. காய்கறிகளை வைத்து விட்டு செல்வதை நோட்டமிடும் கும்பல்,அவர்கள் திரும்ப வருவதற்குள் காய்கறிகளை அலேக்காக பையுடன் தூக்கி செல்கிறார்கள். அதுமட்டும் இன்றி சாக்கு மூட்டையில் காய்கறி வாங்கி வைத்திருந்தாலும் அதற்கும் உத்தரவாதம் கிடையாது. இது அருகில் வண்டியை நிறுத்துபவர்களுக்கும் தெரிவது இல்லை. இதனால் திருடர்களுக்கு தக்காளி திருடுவது கைவந்த கலையாக அமைந்து விடுகிறது. மேலும் நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் செய்பவர்களுக்கும் இதுபற்றி தெரிவது இல்லை. கண்காணிப்பு கேமராவும் இல்லை. பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த உழவர் சந்தையில் பொருட்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் உழவர் சந்தைக்கு வெளியிலும் இதே சூழ்நிலை தான். கடந்த சில நாட்களுக்கு முன் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிள் அதிகாலை 2.30 மணி அளவில் திருட்டு போனது. பின்னர் போலீசாரால் அது மடக்கி பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. ஆகவே உழவர்சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போலீசார் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.மேலும் மாநகராட்சி அதிகாரிகள் உழவர் சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு பொருட்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
    • சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.

    உடுமலை:

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள், பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இது தவிர மலைப்பகுதியில் விளையக் கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய், உருளை மற்றும் சேனைக்கிழங்கு , நெல்லிக்காய் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.

    இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    அதற்கு தகுந்தவாறு உழவர் சந்தை வளாகத்தில் கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாத தால் நடைபாதை முற்றிலும் சேதமாகி உள்ளது. அவற்றை சீரமைப்பதற்கும் அதிகாரிகள் முன் வரவில்லை. இதனால் சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள்- விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.

    இதனால் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்ற விவசாயிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதற்கு உண்டான கோரிக்கையை விடுத்தும் இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது.

    எனவே முதல் கட்டமாக உழவர் சந்தை வளாகத்தில் சேதம் அடைந்த பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.    

    • கலெக்டர், எம்.எல்.ஏ. விற்பனையை தொடங்கி வைத்தனர்
    • 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, பள்ளிகொண்டாவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள உழவர் சந்தையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    இதனையொட்டி, பள்ளிகொண்டாவில் நடைபெற்ற உழவர் சந்தையில் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    மேலும், உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய உழவர் அடையாள அட்டைகள், எடை எந்திரங்கள் அனைத்து இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    பள்ளிகொண்டா உழவர் சந்தையில் தற்போது 16 கடைகள் அமைக்க ப்பட்டுள்ளன. புதிய உழவர் சந்தை மூலம் பள்ளி கொண்டா, வெட்டு வானம், பிராமணமங்கலம், கந்தனேரி, வேப்பங்கால், ஐதர்புரம், பசுமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழங்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பயன்பெறுவர்.

    வெளிச்சந்தையை விட குறைவான விலையில் காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் கலைச்செல்வி, தாசில்தார் வேண்டா, பி.டி.ஓ.க்கள் சுதாகரன், சாந்தி, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபப்பிரியா, செயல் அலுவலர் உமாராணி, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்க டேசன், பள்ளிகொண்டா நகர செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    • ஒரே ஒரு கடை உள்ள நிலையில் அதற்காக வேளாண்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் பொருப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஒரு உதவியாளரும் உள்ளார்.
    • அனை த்து கடைகளை யும் திறந்து விற்பனை நடைபெற அதி காரிகள் நட வடிக்கை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ரெயில்நிலையம் செல்லும் சாலையில் 100 அடி ரோட்டில் உழவர் சந்தை உள்ளது. சந்தை ெதாடங்க ப்பட்டபோது அனைத்து கடைகளும் இயங்கிவந்த நிலையில் பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது.

    தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்றபின் நலிவடைந்த நிலையில் உள்ள உழவர்சந்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை ஒரே ஒரு கடையுடன் உழவர் சந்தை இயங்கி வருகிறது. உரிய பராமரிப்பு, அடி ப்படை வசதிகள் எதுவும் இல்லாததாலும், போக்கு வரத்து வசதிகள் இல்லாத தாலும் விவசாயிகள் இங்கு கடை வைப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

    ஒரே ஒரு கடை உள்ள நிலையில் அதற்காக வேளாண்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் பொருப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு உதவியாளரும் உள்ளார். ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துகிறீர்கள் என்ற காமெடியை போல மக்கள் வராத இந்த உழவர்சந்தைக்கு தினமும் அலுவலகம் திறக்கப்பட்டு காய்கறிகள் விலைப்பட்டியில் வைக்கப்படுகிறது.

    விவசாயிகள் யாரும் ஆர்வம் காட்டாததால் இங்கு கடை வைத்திருக்கும் ஒருவரும் சில மணிநேரம் இங்கு அமர்ந்துவிட்டு பின்னர் தெருத்தெருவாக காய்கறிகளை விற்பனைக்கு எடுத்துச்சென்றுவிடுகிறார். குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்கவேண்டும். விவசாயிகள் எந்தவித இடைத்தரகரும் இன்றி தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உழவர்சந்தை திறக்கப்ப ட்டது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் சந்தை இங்கு மக்களுக்கு பயன்இல்லாத நிலையில் இருப்பதால் இங்கு அனை த்து கடைகளை யும் திறந்து விற்பனை நடைபெற அதி காரிகள் நட வடிக்கை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திறந்தவெளி மழைநீர் வடிகால் பகுதிகளில் மூடி அமைத்தல் பணி.
    • ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல்.

    திருநாகேஸ்வரம்:

    ஆடுதுறை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    துணை தலைவர் கமலா சேகர் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக செயல் அலுவலர் ராம்பிரசாத் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

    ஆடுதுறை பேரூராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை மற்றும் எரிபொருள் வைப்பறை அமைத்தல், 3-வது வார்டு ஆதிதிராவிடர் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.ஆர் பார்க் பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்தல், பேரூராட்சி உள்விளையாட்டு அரங்கம், டானரி தெரு பகுதியில் ரூ. 12.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கால்நடை மருத்துவமனை அருகிலும், உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் சிறிய மின் விசை பம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், நடராஜபுரம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி அருகே ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திறந்தவெளி மழைநீர் வடிகால் பகுதிகளில் மூடி அமைத்தல் பணி,

    டானரித்தெரு ,மருத்துவக்குடி, பாத்திமாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரித்தல் மற்றும் பழுது நீக்கம் பணிகள், கஞ்சான் மேட்டுத்தெரு மற்றும் கிருஷ்ணன் கோயில் தோப்பு தெருவை இணைக்கும் இணைப்பு பாலம் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் இருபுறமும் தடுப்புச் சுவருடன் புதிய பாலம் அமைக்கும் பணி, புது முஸ்லீம் தெருவில் ரூ.6.20லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவருடன் கூடிய சிறுபாலம் அமைத்தல் பணி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முடிவடைந்த பணிகள் குறித்தும் தற்போது மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.

    கூட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தரமாகவும் விலை மலிவாகவும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்கள் கிடைப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கூடிய உழவர் சந்தை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வார்டு கவுன்சிலர்கள் முத்துபீவி ஷாஜஹான், மீனாட்சி முனுசாமி, சரவணன், செல்வராணி சிவக்குமார், இளங்கோவன், சுகந்தி சுப்ரமணியன், சாந்தி குமார், ஷமீம் நிஷா ஷாஜஹான், கண்ணன், பால் தண்டாயுதம், மாலதி சிவக்கொழுந்து, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பரமேஸ்வரி சரவணக்குமார் நன்றி கூறினார்.

    • நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
    • தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக் கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்க ளில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கி ன்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக் கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்க ளில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கி ன்றனர்.

    தமிழ கத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

    நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறி மற்றும் பழங்கள் விலை விவரம் (ஒரு கிலோவுக்கு) வருமாறு:-

    கத்தரி ஒரு கிலோ ரூ.50 முதல் 70, தக்காளி ரூ. 80 முதல் 90, வெண்டை ரூ.32 முதல் 36, அவரை ரூ.50 முதல் 70, கொத்தவரை ரூ.40, முருங்கைக்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.36, புடல் ரூ.32 முதல் 36, பாகல் ரூ.70 முதல் 80, பீர்க்கன் ரூ.40 முதல் 60, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ.20, தேங்காய் ரூ.25, எலுமிச்சை ரூ.50, கோவக்காய் ரூ.36, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ.23 முதல் 25, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் 110 வரை விற்கப்படுகிறது.

    இதேபோல், கேரட் ரூ.60 முதல் 65, பீட்ரூட் ரூ.40 முதல் 50, உருளைக்கிழங்கு ரூ.25 முதல் 27, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.230, பூண்டு ரூ.50, பச்சை மிளகாய் ரூ.90 முதல் 100, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ.60, கருணைக்கிழங்கு ரூ.50, பப்பாளி ரூ. 20-க்கு விற்கப்படுகிறது.

    நூல்கோல் ரூ.32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ.70, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.20, விலாம்பழம் ரூ.40.

    • நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
    • தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

    நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வருமாறு:-

    கத்தரி ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.70, தக்காளி ரூ.70 முதல் ரூ.80,

    வெண்டை ரூ.36 முதல் ரூ.40, அவரை ரூ.40 முதல் ரூ.60, கொத்தவரை ரூ.40, முருங்கைக்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.36, புடல் ரூ.32 முதல் ரூ.40,

    பாகல் ரூ.60 முதல் ரூ.70, பீர்க்கன் ரூ.60 முதல் ரூ.70, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் ரூ.10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் ரூ.10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் ரூ.12,

    மாங்காய் ரூ.20, தேங்காய் ரூ.25, எலுமிச்சை ரூ.80, கோவக்காய் ரூ.36,

    கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.30 முதல் ரூ.50, பெ.வெங்காயம் ரூ.23 முதல் ரூ.25, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் ரூ.100, கேரட் ரூ.65 முதல் ரூ.75, பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.27, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் ரூ.20, காளிபிளவர் ரூ.15 முதல் ரூ.25, குடைமிளகாய் ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் கொய்யா ரூ.30 முதல் ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50,

    பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் ரூ.25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.230, பூண்டு ரூ.50, பச்சை மிளகாய் ரூ.70 முதல் ரூ.80, வாழை இலை ரூ.30,

    மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் ரூ.70, சேனைக்கிழங்கு ரூ.60, கருணைக்கிழங்கு ரூ.50, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ.32 முதல் ரூ.36, பச்சை பட்டாணி ரூ.70, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.20, விலாம்பழம் ரூ.40-க்கு விற்கப்பட்டது.

    ×