உள்ளூர் செய்திகள்
கோப்புபடம். 

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது

Published On 2022-07-21 06:27 GMT   |   Update On 2022-07-21 06:27 GMT
  • தகுதி மிக்க வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
  • முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அறை எண் 439, 4 வது தளம் மற்றும் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகிய இரண்டு இடங்களில் நாளை 22-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வேலைத் தேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரிசெய்து புதுப்பித்துக்கொள்ளலாம். தகுதி மிக்க வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News