உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தொழில் திறன் சான்று பெறுவது குறித்த கருத்தரங்கம்

Published On 2022-07-16 06:46 GMT   |   Update On 2022-07-16 06:46 GMT
  • தொழில் திறன் வளர்ப்பு சான்றிதழ் பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
  • திறன் சான்றிதழ் பெறுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் திறன் வளர்ப்பு வாரம் என்ற நிகழ்ச்சி நடந்தது. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தொழிலாளர்களுக்கு, தொழில் திறன் வளர்ப்பு சான்றிதழ் பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.திறன் வளர்ப்பு கருத்தரங்கம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது. வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். இளம் வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் வரவேற்றார்.திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் பத்மாவதி, தொழில் வளர்ச்சி குழும பயிற்சியாளர் கண்ணன், கனரா வங்கியில் கிராம தொழில் பயிற்சி நிலைய பிரதிநிதி கோகுல், பின்னலாடைத்துறை பயிற்சியாளர் ராமசாமி, ஜவுளித்துறை மதிப்பீட்டாளர் சுகாதாரன் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில், தொழில் திறன் வளர்ப்பு பயிற்சியின் நோக்கம், தொழில்முனைவோராக மாற்றும் முயற்சிகள், திறன் சான்றிதழ் பெறுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.

Tags:    

Similar News