உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பல்லடத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-01-29 08:19 GMT   |   Update On 2023-01-29 08:19 GMT
  • மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
  • வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம்:

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பல்லடம்,பொங்கலூர் வட்டார அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 242 இளைஞர்கள் கலந்து கொண்டனர் .அதில் 74 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். திறன் பயிற்சிக்கு 31 நபர்கள் தேர்வாகினர். 15 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் 23 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.6 கோடி தர மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் முத்து, ஜோசப் ரத்னராஜ், விஜயகுமார், மாவட்ட வள பயிற்றுநர் முனிராஜ், பல்லடம் வட்டார தொழில் மைய அலுவலர் ஹரிகரன், மற்றும் பல்லடம், பொங்கலூர், வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News