உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி - 28-ந் தேதி நடக்கிறது

Published On 2022-07-20 03:45 GMT   |   Update On 2022-07-20 03:46 GMT
  • பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன் பெறலாம்.
  • ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளன.

இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன் பெறலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News