உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அமராவதி சா்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-05-08 06:03 GMT   |   Update On 2023-05-08 06:03 GMT
  • ஆலையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பாா்வையிட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா்.
  • வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உடுமலை:

உடுமலை அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான அரவை பணிகள் கடந்த மே 3 தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆலையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பாா்வையிட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா். அப்போது, நடைபெற்ற புதிய எந்திரங்கள் பொருத்தும் பணியையும் பாா்வையிட்டாா்.தொடா்ந்து, உடுமலை வட்டம், ராகல்பாவி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் பூலாங்கிணறு கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்று நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மேலாண்மை இயக்குநா் சண்முகநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

Tags:    

Similar News