உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
- நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்துக்கள் குறித்து அவதுாறாக பேசிய ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடு புரத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில்இந்துக்கள் குறித்து அவதுாறாக பேசிய நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் லோகநாதன்,சர்வேஸ்வரன், ராஜ்குமார்,மற்றும் இந்து முன்னணி மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.