உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட செல்போன்களை எஸ்.பி., சசாங் சாய் பார்வையிட்ட காட்சி. 

காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Published On 2022-07-09 04:16 GMT   |   Update On 2022-07-09 04:16 GMT
  • சைபா் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக 47 செல்போன்கள் மீட்கப்பட்டன.
  • திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் செல்போன்களை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் தவறவிடப்பட்ட மற்றும் திருடுபோன செல்போன் தொடா்பாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடா்பாக சைபா் கிரைம் போலீசார் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 47 செல்போன்கள் மீட்கப்பட்டன.

இந்த செல்போன்களை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், பங்கேற்ற திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் செல்போன்களை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கிருஷ்ணசாமி, காவல் ஆய்வாளா்சித்ராதேவி, உதவி ஆய்வாளா் ரோஸ்லின் அந்தோனியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News