உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து

Published On 2022-09-15 11:58 GMT   |   Update On 2022-09-15 11:58 GMT
  • பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
  • வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த நூல் மில்லில் ஊழியர்கள் நேற்று பகலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் ஊழியர்கள் காயமின்றி தப்பினர். சேதம் குறித்து கணக்கிட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News