உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Published On 2022-09-06 09:27 GMT   |   Update On 2022-09-06 09:27 GMT
  • தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்
  • ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, வக்கணம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இவ்விழாவிற்கு ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆஜம், முனியப்பன், சாந்தி, ஐசக் ஆகியோர் வரவேற்றனர். பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் சி.எஸ்.பெரியார் தாசன், ஆர். மகேந்திரன் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

இதனை அடுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று ஆசிரியர் தினத்தை யொட்டி பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் எம்.எல். ஏ. தேவராஜி பரிசுகள் வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத்தலைவர் பெ.இந்திரா பெரியார்தா சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News