- 95 மாணவர்கள் படித்து வருகின்றனர்
- கவுன்சிலர் வழங்கினார்
ஜோலார்பேட்டை:
நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அதிபெரமனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் அப்பகுதி சுற்றியுள்ள 95 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜி எம்எல்ஏ பள்ளியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கு மாறும் கோரிக்கை விடுத்தனர்
இந்த கோரிக்கையை ஏற்று நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14 வது வார்டு உறுப்பினர் இல.குருசேவ் தனது சொந்த செலவில் அந்த பள்ளிக்கு தேவையான நாற்காலிகளை வாங்கி தருவதாக எம்எல்ஏ விடம் தெரிவித்தார் இதனையடுத்து நேற்று அப்பள்ளிக்கு தேவையான நாற்காலிகளை பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழியிடம் வார்டு உறுப்பினர் இல.குருசேவ் வழங்கினார் அப்போது பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.