search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt school"

    • அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
    • அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ந்தேதி முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

    5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அதில் உள்ளூர் பிரமுகர்களை பங்கு பெறச்செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும்.

    அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது உடையவர்களை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

    வீடு தோறும் நேரடியாக சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
    • பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், கலெக்டர் ச.உமா தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று 379 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    வடக்கிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்ப அமைச்சர் பெருமக்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் நிலையை எண்ணிக்கொண்டிருக்கும் இதே வேலையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் எடுத்த முடிவை நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றுகிறோம் என்ற மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள்.

    ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது. இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    இன்றைய தினம் 379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2-ஆம் கட்டத்தில் 964 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது பங்கேற்றவர்களுக்கும் சான்று வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. வெற்றி பெற்றவர்களும், பங்கேற்றவர்களும் தொடர்ந்து அடுத்த ஆண்டும் கனவு ஆசிரியர் விருது பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இன்று நமது இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள். இச்சிறப்பு மிக்க நன்னாளில் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவரது பிறந்த நாளில் கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்வன் திட்டத்தையும், சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது பல்வேறு பள்ளிக்கல்வித்துறை திட்டங்களையும் அறிமுகப்படுத்தினோம்.

    அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா, விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் மு.கருணாநிதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் மூலம் அகற்றம்
    • கனமழை பெய்ததன் காரணமாக தேங்கியது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உள்ள பழைய கட்டிடங்களை புதுப்பிப்ப தற்காக தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று கனமழை பெய்ததன் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற கட்டிடத்தின் மீது மழை நீர் தேங்கியது.

    இந்நிலையில் தலைமை ஆசிரியர் உத்தரவின் பேரில் கட்டிடத்தில் தேங்கிய மழை நீரை மாணவர்கள் அகற்றினர்.

    இது குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது:-

    கட்டிடத்தின் மேல் தளத்தில் மழைநீர் தேங்கினால் கட்டிடம் சேதமடைந்து விடும் இதனால் மழை நீரை அகற்றியதாக தெரிவித்தார்.

    பள்ளி கட்டடத்தின் மேல் தளத்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் மழை நீரை அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் தலைமை தாங்கினார்.
    • பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார் உட்பட ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் விழா நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் தலைமை தாங்கினார். மாணவ- மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். உறுதி மொழியின் போது இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேல் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதி மொழியை ஏற்கிறேன், எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார் உட்பட ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.
    • விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.

    போரூர்:

    விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்வியை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் "வித்யாரம்பம்" நிகழ்ச்சி இன்று பல்வேறு இடங்களில் விமரிசையாக நடைபெற்றது.

    கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக குவிந்து இருந்தனர். முன்னதாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. 2 ½ வயது முதல் 3½வயது வரை உள்ள மழலை குழந்தைககள் பெற்றோரின் மடியில் அமரவைக்கப்பட்டு நெல் மற்றும் அரிசியில் "அ" எழுத்தை எழுதி கல்வியை தொடங்கினர். மேலும் குழந்தைகளின் நாக்கில் தங்க மோதிரத்தாலும் எழுதப்பட்டது. வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக அய்யப்பன் கோவிலில் ஏராளமானோர் திரண்டு இருந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    வடபழனி கோவிலில் காலை 7.30மணிக்கு தொடங்கிய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்றனர். விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.

    திருவள்ளூர் ஜெயா நகரில் உள்ள ஸ்ரீ மகாவல்லப கணபதி கோவிலில் வித்யா ரம்பம் நிகழ்ச்சிக்கு அதிகாலை முதலே ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.

    இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் மற்றும் தனியார் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது

    • தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ மாணவிகளின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வட்டார வள மையங்கள் சார்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது.
    • ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட இந்த கலை விழா இந்த ஆண்டு கொடைக்கானலில் பெயரளவிற்கு நடத்தப்பட்டது.

    கொடைக்கானல்:

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ மாணவி களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வட்டார வள மையங்கள் சார்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மிகுந்த ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட இந்த கலை விழா இந்த ஆண்டு கொடைக்கானலில் பெய ரளவிற்கு நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகளின் பங்கேற்பு இல்லாததால் போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டது.

    போதிய பங்கேற்பு இல்லாததால் பங்கு பெற்ற ஒருவருக்கு மட்டுமே பரிசும் வழங்க ப்பட்டது. கொடைக்கானல் வட்டார வள மையம் சார்பில் கடந்த 18ஆம் தேதி மாணவ-மாணவி களுக்கான கலை விழா தொடங்கியது. இந்த கலைவிழா நிகழ்வில் விழா 3 நாட்கள் நடத்தப்பட வேண்டும். முதல் நாளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ -மாணவிகளுக்காகவும், அடுத்த நாள் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்காகவும், 3ம் நாள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கும் இந்த கலை விழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

    கொடைக்கானலில் 21 பள்ளிகள் உள்ளன. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர் . ஆனால் கொடைக்கானலில் நடந்த கலைத்திருவிழாவில் சுமார் 150 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். 26 வகையான போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதல் நாள் போட்டிகளில் 130 மாணவ- மாணவிகள் மட்டுமே பங்கேற்று உள்ளனர். 2ம் நாள் போட்டிகளில் சுமார் 60 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். 3ம் நாள் போட்டி நடத்தப்படவே இல்லை. மாணவ-மாணவிகள் பங்கேற்காத காரணத்தினால் 3ம் நாள் போட்டி ரத்து செய்ய ப்பட்டது.

    வட்டார வள மைய பொறுப்பு அலுவலர் சகாய செல்வி என்பவர் இந்த கலைத் திருவிழாவிற்கு பொறுப்பு ஏற்று நடத்தியுள்ளார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினாலும் பெயரளவிற்கு நடத்த ப்பட்டதாலும் கொடை க்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளி க்கொணர முடியாமல் இந்த கலைத் திருவிழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக் கொணர்வதே இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆனால் இந்த அடிப்படை நோக்கத்தை தகர்க்கும் விதமாக கொடைக்கானலில் நடந்த கலை விழா நடந்துள்ளது. கொடைக்கானலில் நடந்த கலை விழா பொறுப்பா ளர்கள் முன் தயாரிப்பு சந்திப்புகளையோ, அல்லது 21 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களையோ சந்திக்காமல் அவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல், பெயரளவிற்கு இந்த போட்டிகளை நடத்தியுள்ளனர்.

    இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த மலை வாழ் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாமலும் பரிசுகள் பெற முடியாமலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த கலை விழா போட்டிகளை ஒருங்கிணைப்புடன் செய்து மலைவாழ் மாணவ மாணவிகளின் திறமைகளை வெளியே கொண்டு வந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர்.
    • பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அரசினர் மேல்நிலைப்பள்ளிமில் 1998-2000 ல் பயின்ற பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர். பின்னர் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பள்ளி காலங்களில் நடந்த சுவாரசியங்களை பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் ஆண்டுதோறும் சந்திப்பு நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அனைவரும் பகிர்ந்து கொள்வதாகவும் மாணவர்கள் தனது நண்பர்களை 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதில் முன்னாள் தலைமை ஆசிரியர் இலட்சுமணபெருமாள், மோகனசுந்தரம், இளவரசன், தேவகி, தமிழரசி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    மாணவர்கள் முன்னதாக தாங்கள் பயின்ற பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.

    • சம்பவம் மாணவர்கள் மற்றும் கிராமமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஏற்ப பள்ளி கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குறுகலான இடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளி வகுப்பறைகளுக்கு இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் மலம் பூசியும் குடிநீர் தொட்டி உடைத்த சம்பவம் மாணவர்கள் மற்றும் கிராமமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் மேலும் அடிக்கடி மர்மநபர்கள் பள்ளியில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    தமிழ்நாடு அரசு உடனடியாக பள்ளிக்கு உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி வகுப்பறைகளுக்கு மலம் தடவிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • பூலாம்பாடி அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது
    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் கொடியேற்றினார்

    அரும்பாவூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் சர்வதேச தொழிலதிபருமான டத்தோ பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும்போது, நான் பயின்ற பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வந்தது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.என்னைப்போல இங்குள்ள பெரும்பாலானோர் பயின்றது இந்த பள்ளிதான்.பெற்றோரிடம் இருப்பதை விட ஆசிரியரிடமே அதிகநேரம் இருக்கிறோம்.நாங்கள் படிக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது என்பையன் நல்லா படிக்கனும் அடிச்சு சொல்லிக்கொடுங்க என்பார்கள்.ஆனால் இன்று அடித்தால் ஏன் என் பையனை அடித்தீர்கள் என பெற்றோர்கள் கேள்விகேட்கிறார்கள் அது பெற்றோர்கள் செய்யும் தவறு.இன்றைய காலக்கட்டத்தில் மரியாதை பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை சொல்லித்தருவது ஆசிரியர்கள் தான்.பெரம்பலூர் மாவட்டத்திலேயேசிறந்த பள்ளி என பூலாம்பாடி மேல்நிலைப்பள்ளி என்ற பெயர் எடுக்க வேண்டும்.அதற்கு என்னால் முடிந்ததை செய்து தருகிறேன்.மாணவர்கள் ஒவ்வொருவரும் சாதிக்ககூடியவர்கள் தான்.உங்களதுவாழ்க்கையை நீங்கள் முடிவுசெய்யனும்.இன்றைய காலத்தில் படிப்புதான் மிக முக்கியம்.படிப்பு இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது.இன்று நீங்கள் கஷ்டப்பட்டால் பின்னால் நன்றாக இருக்க முடியும்.என்னைப்போ லநீங்களும் இதே பள்ளியில் சிறப்பு விருந்தினராக வரவேண்டும்.என்னால் முடிந்தது உங்களாலேயும் முடியும்.மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்புநல்க வேண்டும்.மலேசியாவில் அரசுபள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசுவேலை.அதே போல் கூடிய சீக்கிரம் இந்தியாவிலேயும் வரும் என எதிர்பார்க்கிறேன்.அரசுபள்ளி ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்த்தாலே ஊரில் உள்ள அனைவரும் அவர்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்ப்பார்கள் என்றார்.

    முன்னதாக டத்தோ பிரகதீஸ்குமார் அவர்களுக்கு சாரண சாரணிய இயக்க மாணவர்கள் வரவேற்பு கொடுத்தனர்.நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் தொழிலதிபர்கள் இசைபாலு, டிகேஎஸ் ரமேஸ், பள்ளிதலைமை ஆசிரியர் முருகேசன், உள்ளிட்ட ஆசிரியர்களும், பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி செங்குட்டுவன், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
    • வகுப்பறைகள் புனரமைப்பு செய்வதற்கான பூமி பூஜை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வீதியில் அமைந்துள்ள சின்னாத்தா மேல்நிலை ப்பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் பழுதடைந்து இருந்தது.

    இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொகுதி எம்.எல்.ஏ பிரகாஷ்குமாரிடம் வகுப்பறைகளை புனரமைப்பு செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். உடனே பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து சின்னாத்தா மேல்நிலைப்பள்ளி கட்டிட ங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பழுந்தடைந்த அனைத்து வகுப்பறை கட்டிடங்களை யும் சரிசெய்ய பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. அரசுக்கு கோரிக்கை வைத்து நிலையில், ரூ.45 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புனரமைப்பு செய்வதற்கான பூமி பூஜை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பள்ளி வளாகத்தில் நடந்தது. அவர் பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், சின்னதா மேல்நிலைப்பள்ளி முதல்வர் சாய்வர்கீஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்வித்துறை, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் கோட்டம் 2 செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் ராமதாசன் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 217 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விரும்புவோருக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி 73 மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

    கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

    • ரெட்டியார்பட்டியில் அரசு பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
    • முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு தரை தளம் அமைத்து கொடுத்தார்.

    நெல்லை:

    பாளை ஒன்றியம் ரெட்டியார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தரை தளம் மோசமாக காணப்பட்டதை அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தனது சொந்த செலவில் தரை தளம் அமைத்து கொடுத்து அதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார். இதற்காக பள்ளி மாணவர்கள் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×