உள்ளூர் செய்திகள்
கொல்லுமாங்குடி நாட்டாறு பாலம் அருகில் 60 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள நாடாகுடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவர் கொல்லுமாங்குடி நாட்டாறு பாலம் அருகில் 60 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து சென்ற பேரளம் போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து உலகநாதனை கைது செய்தனர்.