உள்ளூர் செய்திகள்
சாயும் நிலையில் உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
- மின்கம்பத்திலிருந்து செல்லக்கூடிய மின்கம்பிகளும் மிகவும் தாழ்ந்த நிலையில் தொட்டு விடும் தூரத்தில் தான் செல்கிறது.
- அரசு அலுவலர்கள், பயனாளிகள் சென்று வரக்கூடிய சூழலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா அலுவலகம் அருகே உள்ள மின் கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது .
அதிலிருந்து செல்லக்கூ டிய மின் கம்பிகளும் மிகவும் தாழ்ந்த நிலையில் தொட்டு விடும் தூரத்தில் தான் செல்கிறது. தினமும் இந்த பகுதியில் சுமார் 100 முதல் 150 பேர் சென்று வருகின்றனர். இதில் அங்கு பணி புரியும் அரசு அலுவலர்கள் பயனாளிகள், தெருவில் வசிப்பவர்கள், அனைவரும் சென்று வரக்கூடிய சூழலில், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.இது குறித்துபலமுறைபுகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம்சா ட்டுகின்றனர்.எனலே அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறும் முன்னர் உடனடியாக மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.