உள்ளூர் செய்திகள்
கடையநல்லூரில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா
- கடையநல்லூரில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது
- லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில்நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் கடையநல்லூர் பி.எஸ்.என்.எல். அருகே பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கடையநல்லூர் வனரேஞ்சர் சுரேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், வனவர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். பள்ளி முதல்வர் அந்தோணி நன்றி கூறினார்.