உள்ளூர் செய்திகள்

தென்காசி உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்

Published On 2022-08-21 08:17 GMT   |   Update On 2022-08-21 08:17 GMT
  • உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் செங்கோட்டை வட்டாரம் சீவநல்லூர் வயல்வெளி பகுதியில் விவசாயிகளுக்கான உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

தென்காசி:

உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் செங்கோட்டை வட்டாரம் சீவநல்லூர் வயல்வெளி பகுதியில் விவசாயிகளுக்கான உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் கிருஷ்ணகுமார் அறிவுரைப்படி தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

செங்கோட்டை வேளாண்மை வணிக உதவி வேளாண்மை அலுவலர் இப்ராஹிம் வரவேற்றார். இந்த முகாமில் உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும், அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும், விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்தல் பற்றியும் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் விளக்கி கூறினார்.

மேலும் உழவர்சந்தை விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை பற்றி விளக்கி கூறப்பட்டது. தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.


Tags:    

Similar News