உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையத்தில் சிறுவர்களிடம் தகராறு செய்த வாலிபர்கள்; தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

Published On 2022-11-04 09:39 GMT   |   Update On 2022-11-04 09:39 GMT
  • வாலிபர்களை முகமது சல்மான் சத்தம் போட்டு உள்ளார்.
  • முகமது சல்மான் கையில் வாலிபர்கள் பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

நெல்லை:

மேலப்பாளையம் பங்களாப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சல்மான் (வயது 22). இவர் சம்பவத்தன்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த சிறுவர்களிடம் 2 வாலிபர்கள் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்த முகமது சல்மான் அவர்களை சத்தம் போட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள். முகமது சல்மான் கையில் பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து மேலப்பாளையம் போலீசில் முகமது சல்மான் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் வாலிபரை வெட்டி விட்டு சென்றது கணேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சூர்யா என்ற சுரேஷ் (24), ஆசுரன் கீழத்தெருவை சேர்ந்த யூனுஸ் (22) என்பது தெரிய வந்தது.

Tags:    

Similar News