உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபர் சாவு

Published On 2022-08-16 09:48 GMT   |   Update On 2022-08-16 09:48 GMT
  • 7 வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை

ஊட்டியை சேர்ந்தவர் ரோபின்சன் (வயது 37). இவருக்கு 11 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் 7 வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர். இதனால் ரோபின்சன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

சம்பவத்தன்று அவர் கோவை மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். ஓட்டலில் அளவுக்கு அதிகமாக மது குடித்தார்.

இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்குவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News