search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் சாவு"

    • பரிசோதித்து இறந்ததாக தகவல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த சதுப்பேரி, பெரிய அகமேடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் மூலை கேட்டில் இருந்து கந்தநேரி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பைக் மீது சக்திவேல் ஓட்டிச் சென்ற பைக் மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேனூர் வீர கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

    நேற்று முன்தினம் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பைக்கில் தேவனாம்பட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். தேவனாம்பட்டு சாலையில் வந்தபோது பைக் நிலை தடுமாறி சுரேஷ் கீழே விழுந்தார்.

    இதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார் அவரை சமீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    அருமனை :

    அருமனை அருகே உள்ள செம்மங்காலையை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சிபி (வயது 18). இவர் மோட்டார் சைக்கிளில் மேல்புறம் அயக்கோட்டு பகுதியில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்ற வசந்தா (63), மனோகரன் (60) ஆகியோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சிபி உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • வீட்டில் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவர் தனது வீட்டில் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 26). இவர் கே.வி. குப்பத்தில் இருந்து காட்பாடி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சென்னாங்குப்பம் தனியார் பள்ளி அருகே சவுந்தரராஜன் என்பவர் சைக்கிளில் சாலையை கடந்தார். எதிர்பாராத விதமாக தனசேகர் ஓட்டிச் சென்ற பைக் சவுந்தரராஜன் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட தனசேகர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கே.வி. குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனசேகர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலையா? போலீசார் விசாரணை
    • நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூரோதயன் (வயது 36). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் பூரோதயன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இன்று காலை நிலத்தில் வழியாக சென்றவர்கள் பூரோதயன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூரோதயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

    இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் நண்பர்களின் ஏற்பட்ட பிரச்சனையால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22) கூலி தொழிலாளி.

    இவருக்கு திருமணம் முடிந்து 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நந்தகுமார் ரெட்டிவலம் கிராமத்தில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் இரவில் பனப்பாக்கம் அருகே நெடும்புலி கிராமத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நந்தகுமார் மீது மோதியது.

    இதில் இவர் உடல் நசுங்கி பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாலிபர் மீது மோதி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24).
    • நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24) சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ஏ.வி.ஆர் ரவுண்டானா பைபாஸ் சாலையில் கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார். அந்த வழியில் சென்றவர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 3 வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் விசாரணை

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள பி.எல்.தாண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெய்ஸ்ரீராம் (வயது 26). நேற்று நள்ளிரவு ஜெய்ஸ்ரீராம் அவரது நண்பர்களான சுனில்(21), பாலாஜி(26) ஆகியோருடன் பைக்கில் பி.எல்.தண்டா பகுதியிலிருந்து செங்கம் நோக்கி சென்றனர். முறையாறு அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெய்ஸ்ரீராம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஜெய்ஸ்ரீராமை செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமார் (வயது 24). இவர் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது பைபாஸ் சாலையில் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி சந்திரன் படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளி குட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (வயது 24). இவர் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    தடுப்பு சுவரில் மோதி பலி

    அப்போது பைபாஸ் சாலையில் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி சந்திரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    விசாரணை

    இதுகுறித்து புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நண்பர்களை சந்திக்க சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பெரியவேலி யநல்லூர் கிராமம் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவருடைய மகன் அஜித்(வயது 20). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் ஆரணி அருகே உள்ள மாமண்டூர் கிராமத்திற்கு தனது நண்பர்களை சந்திக்க பைக்கில் சென்றார்.

    பின்னர் ஆரணி-செய்யாறு நெடுஞ்சாலையில் கலவையை அடுத்துள்ள மாம்பாக்கம் அருகே பைக்கில் வந்தார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் திடீரென சாலையோரமாக இருந்த மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழைப்பந்தல் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், பூஜா, எஸ்.பி தனிப்படை ரகுராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் பேசிக்கொண்டே நடந்து சென்றார்
    • விநாயகர் ஊர்வலத்தில் பரிதாபம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பள்ளி தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 25). தொழிலாளி. இவர் நேற்று மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். சாலையில் பேசிக்கொண்டே தங்கராஜ் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக தங்கராஜ் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அங்கு நின்றவர்கள் படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×