search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A teenager died"

    • தலை மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை

    கோவை சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் திரு.வி.க நகரை சேர்ந்தவர் ஜான் சேவியர் (வயது 37). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் நாகமாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேற்கூரை அமைக்கும் வேலைக்கு சென்றார். அங்கு 30 அடி உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது மேற்கூரையில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் திடீரென சரிந்தது. இதில் ஜான் சேவியர் தடுமாறி 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவருக்கு தலை மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரியாஸ் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.
    • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியை சேர்ந்தவர் நசீர். இவரது மகன் ரியாஸ்(வயது18). ரியாஸ் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் படிப்பை பாதியிலேேய விட்டு விட்டு, வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு ரியாஸ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான மாத்யூவுடன் வெளியில் செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி ரியாசும், அவரது நண்பர் மாத்யூவும், மோட்டார் சைக்கிளில் அனையட்டி பகுதிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ரியாஸ் ஓட்டினார்.

    ராம்சந்தில் இருந்து அனையட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.

    இதில் ரியாஸ் மற்றும் அவரது நண்பர் மாத்யூ ஆகியோர் தூக்கி வீசப்பட்டு லாரியின் அடியில் சிக்கினர்.

    இதில் ரியாஸ் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாத்யூ படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, லாரியின் அடியில் சிக்கி உயிருக்கு போராடிய மாத்யூவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த ரியாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    பெரியநாயக்கன் பாளையம் அடுத்த வீரபாண்டி ஊராட்சியில் உள்ளது அறிவொளி நகர்.

    இந்த பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்தோஷ்(வயது18). இவர் 7-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று சந்தோஷ் தனது நண்பர்களான மதன்குமார், ஜெகதீஷ்குமார் ஆகியோருடன் சாமநாயக்கன் பாளையத்தில் உள்ள கல்லுக்குழிக்கு குளிக்க சென்றனர்.

    அங்கு 3 பேரும் ஜாலியாக விளையாடி மகிழ்ந்து குளித்து கொண்டிருந்தனர். அப்போது சந்தோஷ் மேலே இருந்து கல்லுக்குழிக்குள் குதித்தார்.

    இதில் அவர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. வெகுநேரமாகியும் சந்தோஷ் மேலே வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்.. என சத்தம் போட்டனர்.

    வாலிபர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அவர்களிடம் நண்பர் தண்ணீரில் மூழ்கிய விவரத்தை தெரிவித்தனர்.

    உடனடியாக இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் ெகாடுத்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு துறை அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் சுரேஷ் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் கல்லுக்குழியில் இறங்கி வாலிபர் சந்தோசை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணியை தாண்டியும் மீட்பு பணியானது தொடர்ந்தது. ஆனால் தண்ணீர் அதிகமாக குளிர்ந்ததாலும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    இன்று காலை தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரப்பர் படகு மூலம் கல்லுக்குழி முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    2 மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய வாலிபர் சந்தோசை தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர்.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • காரை அங்கேயே நிறுத்தி விட்டு ஒடிவிட்டார்.

    கோவை,

    மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன்(47). இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை விஷயமாக ேகாவை மாவட்டம் சூலூருக்கு வந்தார்.

    பின்னர் வேலை முடிந்ததும் இரவில் சூலூரில் இருந்து திருப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சங்கோதி பாளையம் பிரிவில் சென்ற போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அறிவழகன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    காரை ஒட்டி வந்த நபர் காரை அங்கேயே நிறுத்தி விட்டு ஒடிவிட்டார். இதனை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய டிரைவரை தேடி 

    • கவுதம் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
    • நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    கோவை,

    கோவை இடையர்பாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் கவுதம் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று கவுதம் தனது நண்பர்களுடன் கணுவாய் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்றார்.

    அங்கு நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது திடீரென அவர் நிலைகுலைந்து மயங்கி சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்ைசக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு கவுதமை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விஜய் பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    அரச்சலூர்,

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் விஜய் (வயது 23).

    இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த நவீன (21) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு வயதில் ஜாஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமண த்துக்குப் பிறகு இவர்கள் ஈரோடு மாவட்டம் அட்ட வணை அனுமன் பள்ளி அருகே உள்ள முருகந்தொழு வுப்பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மேச்சேரிக்கு குடும்ப த்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தின மனைவி மற்றும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு விஜய் முருகந்தொழுவு வந்தார்.

    தொடர்ந்து அவர் அரச்சலூர் அருகே உள்ள பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். இதை கண்ட அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள கிணற்றுக்குள் இறங்கி விஜயை மீட்டு அரசு ஆ!ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சதீஸ் நிலை தடுமாறி சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக விழுந்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (வயது 38). இவர் அருகே உள்ள தட்டப்பள்ளி க்கு உணவு வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த வழியாக பவானிசாகர் பகுதியை சேர்ந்த சரவணன் (32) என்பவர் அன்னூரில் இருந்து மோட்டார் சைக்கி ளில் வந்து கொண்டு இரு ந்தார். சரவணன் தட்ட ப்பள்ளி அருகே வந்தார். அப்போது சதீஸ் நிலை தடுமாறி சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக விழுந்தார். இதில் அவர்கள் இருவரும் கீேழ விழுந்தனர்.

    இதில் சதீசுக்கு கால் உள் பட பல்வேறு இடங்களில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் சதீசை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சதீசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு காலில் பலத்த அடிப்பட்ட தால் ஸ்கேன் எடுப்பதற்காக அவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லுமாறு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் அங்கு செல்லாமல் சத்திய மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றார்.

    இதையடுத்து அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை காலை வருமாறு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இதை க்யடுத்து அவர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் சதீஸ் வீட்டில் திடீரென இறந்து விட்டார். இது குறித்து போலீசாருக்கு அவரது உறவினர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ் பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போதையில் நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்
    • நண்பர் வீட்டுக்கு சென்றனர்.

    கோவை,

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நித்யானந்தா நாயக் (வயது 30). இவர் திருப்பூரில் தனது உறவினர் திலிப்குமார் நாயக்(34) என்பவருடன் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக இருவரும் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் நண்பருடன் சேர்ந்து கோவையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்துவிட்டு மைலம்பட்டி கருப்பராயன்பாளையத்தில் உள்ள அவர்களது நண்பர் வீட்டுக்கு சென்றனர். அங்கு முதல் மாடியில் நித்யானந்தா நாயக் செல்போனில் யாருடனோ நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் போதையில் நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.  

    • பசுமாட்டின் கொம்பின் மீது போய் விழுந்தார்.
    • விபத்தில் சிக்கிய பசுமாடும் இறந்து போனது.

    கொழிஞ்சாம்பாறை,

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே வசிப்பவர் கிரு ஷ்ணகுமார். இவரது மகன் கிருஷ்ணபி ரிஜித் (வயது23).

    இன்று காலை 7 மணி அளவில் வாலிபர் தனது வீட்டிலிருந்து ஒற்றபாலம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது ரோட்டில் ஒரம் நின்றிருந்த பசுமாடு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடியது. அப்போது எதிர்பாராத விதமாக பசுமாட்டின் மீது கிருஷ்ண பிரிஜித் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

    இதில் பசுமாடும், வாலிபரும் தூக்கி வீசப்பட்டனர். வாலிபர் நேராக பசுமாட்டின் கொம்பின் மீது போய் விழுந்தார். அப்போது கொம்பு வாலிபரின் நெஞ்சில் ஆழமாக பாய்ந்து உயிருக்கு போராடி கொண்டி ருந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, விரைந்து வந்து வாலிபரை மீட்டு ஒற்றப்பாலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தில் சிக்கிய பசுமாடும் இறந்து போனது. இதுகுறித்து ஒத்தப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அஜீஸ் கிணற்று சுற்றுச்சுவரில் அமர்ந்து செல்போனில் பேசினார்.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கோவை

    கேரள மாநில் ஆலப்பு லாவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் அஜீஸ் (வயது 29). இவர் கோவை மாவட்டம் ஆனைமலை தேவதாசம்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மது போதையில் இருந்த அஜீஸ் அந்த பகுதியில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்கு விழுந்தார். அஜீசுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த அஜீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.  

    • குழந்தையைப் பாா்ப்பதற்காக காரில் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றாா்.
    • பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு அங்கிருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது

    ஊட்டி

    ஊட்டியில் தலைக்குந்தா அருகே உள்ள முத்தநாடுமந்துவைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (32). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். அண்மையில் இவருக்கு 4ஆவது குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு பெயா் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், திடீரென அக்குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

    இது குறித்து நவீன்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா் குழந்தையைப் பாா்ப்பதற்காக காரில் முத்தநாடுமந்துவிலிருந்து ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா்.

    காக்காதோப்பு பாரதியாா் நகா் அருகே சென்றபோது காா் நிலை தடுமாறி அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு அங்கிருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நவீன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுமந்து போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஒட்டப்பாறை ஊராட்சி ஊத்துக்குளி ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் பிரவீன்குமார் (24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சம்பவத்தன்று பிரவீன்குமார் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் கொடிகம்பம் அருகே ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.

    இதில் பிரவீன்குமார் தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×