search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "into a well"

    • விஜய் பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    அரச்சலூர்,

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் விஜய் (வயது 23).

    இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த நவீன (21) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு வயதில் ஜாஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமண த்துக்குப் பிறகு இவர்கள் ஈரோடு மாவட்டம் அட்ட வணை அனுமன் பள்ளி அருகே உள்ள முருகந்தொழு வுப்பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மேச்சேரிக்கு குடும்ப த்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தின மனைவி மற்றும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு விஜய் முருகந்தொழுவு வந்தார்.

    தொடர்ந்து அவர் அரச்சலூர் அருகே உள்ள பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். இதை கண்ட அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள கிணற்றுக்குள் இறங்கி விஜயை மீட்டு அரசு ஆ!ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.
    • கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் விண்டெக்ஸ், குத்தகை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (61). இவரது வீடு, தோட்டம் அதே பகுதியில் உள்ளது.

    தோட்டத்தில் 70 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. அதில் 20 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த கிணறு தடுப்பு சுவர் இல்லாத தரைமட்ட கிணறு ஆகும். இவர் தனது தோட்டத்தில் 8 மாத சினையுடன் கூடிய எருமை ஒன்று வளர்த்து வந்துள்ளார்.

    இந்த எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

    உடனடியாக கருப்புசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் நவீன்தரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்த்த பொழுது எருமை மாடு தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.

    கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர். அதன்படி கிரேன் வரவழைக்கப்பட்டு எருமை மாட்டை பத்திரமாக மீட்டனர்.

    ×