search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் விபத்தில் வாலிபர் பலி
    X

    கோத்தகிரியில் விபத்தில் வாலிபர் பலி

    • ரியாஸ் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.
    • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியை சேர்ந்தவர் நசீர். இவரது மகன் ரியாஸ்(வயது18). ரியாஸ் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் படிப்பை பாதியிலேேய விட்டு விட்டு, வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு ரியாஸ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான மாத்யூவுடன் வெளியில் செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி ரியாசும், அவரது நண்பர் மாத்யூவும், மோட்டார் சைக்கிளில் அனையட்டி பகுதிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ரியாஸ் ஓட்டினார்.

    ராம்சந்தில் இருந்து அனையட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.

    இதில் ரியாஸ் மற்றும் அவரது நண்பர் மாத்யூ ஆகியோர் தூக்கி வீசப்பட்டு லாரியின் அடியில் சிக்கினர்.

    இதில் ரியாஸ் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாத்யூ படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, லாரியின் அடியில் சிக்கி உயிருக்கு போராடிய மாத்யூவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த ரியாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×