உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2022-09-03 09:34 GMT   |   Update On 2022-09-03 09:34 GMT
  • மோட்டார் சைக்கிளில் திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக கண்டியூர் வந்தனர்.
  • அரசு பஸ் எதிர்பாராத விதமாக யூகன் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

திருவையாறு:

திருவையாறு அருகே நடுக்காவேரி பாசார் தெருவைச் சேர்ந்த முகேஸ் (32), அவருடைய தம்பி யூகன் (29) ஆகிய இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக கண்டியூர் வந்தனர்.

பிறகு கண்டியூரிலிருந்து நடுக்காவேரி சென்றனர். நடுக்காவேரி அருகே மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக யூகன் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் முகேஸ் (32) கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன்,
சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் சென்று யூகன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். வருகிற 9-ம் தேதி முகேஸ்க்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் யூகன் இறந்ததால் அக்குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News