உள்ளூர் செய்திகள்
மரக்காணத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- மரக்காணத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அவர் வைத்திருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கைப்பணி காலனியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). இவர் அங்ள்ள கடலோரப் பகுதியில் கஞ்சா விற்பதாக மரக்காணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், விஜயரங்கன் மற்றும் போலீசார் ரோந்துபணி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் சந்கதேகத்துக்கு இடமாக நின்ற வாலிபர் சஞ்சையை பிடித்து விசாரித்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து அவர் வைத்திருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.