உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-25 09:55 GMT   |   Update On 2022-07-25 09:55 GMT
  • நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசு கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

நெல்லை:

தமிழ் மாநில காங்கிரஸ் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் தற்போது அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தியது. தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது.

இது போன்று தொடர்ந்து ஏழை மக்களை பாதிக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டணங்களையும் உயர்த்தி வருவதால் பொது மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசு இந்த கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News