உள்ளூர் செய்திகள்

மாணவிகளின் மரணத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-08 08:53 GMT   |   Update On 2022-08-08 08:53 GMT
  • கல்வி கூடங்களில் மாணவிகள் மரணம் அடைவதை கண்டித்து ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மவுலிவாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் மாநில தொழிற்சங்க பேரவை தலைவர் அன்பு தென்னரசன், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஈரா.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

சென்னை:

கல்வி கூடங்களில் மாணவிகள் மரணம் அடைவதை கண்டித்து ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மவுலிவாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தொழிற்சங்க பேரவை தலைவர் அன்பு தென்னரசன், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஈரா.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த கூட்டத்துக்கு மாட்ட செயலாளர்கள் சந்திரசேகர், நாகநாதன், தம்பி ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொகுதி செயலாளர்கள் ஆராவமுதன், ராயப்பன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பத்தூர் தொகுதி செய்தி தொடர்பாளர் கோ.தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் நெல்சன், ஞானசேகரன், கோபி, அருண்பாரதி, குணா.இளஞ்சேகர், ராஜேஷ்குமார், தேவராஜன், சந்தோஷ்ராஜ், தம்பி குணசேகரன், ஆதம்பாலா, பால முருகன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News