உள்ளூர் செய்திகள்

பாவ மன்னிப்பு தாருங்கள் மக்களே... கோவை செல்வராஜ் வேண்டுதல்

Published On 2022-12-10 10:55 GMT   |   Update On 2022-12-10 10:55 GMT
  • காங்கிரசை பொறுத்தவரை கோஷ்டி பூசலுக்கும் பஞ்சமில்லை, பதவி போட்டிக்கும் பஞ்சமில்லை.
  • அதே போன்றதொரு சூழ்நிலையில்தான் கோவை செல்வராஜ் காங்கிரசுக்கு குட்பை சொல்லிவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அரசியலில் பல சுவாரசியங்கள் அடிக்கடி அரங்கேரும். அந்த வகையில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் தி.மு.க.வில் இணைந்ததோடு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார். இரண்டு முறை காங்கிரசில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

காங்கிரசை பொறுத்தவரை கோஷ்டி பூசலுக்கும் பஞ்சமில்லை, பதவி போட்டிக்கும் பஞ்சமில்லை. அதே போன்றதொரு சூழ்நிலையில்தான் கோவை செல்வராஜ் காங்கிரசுக்கு குட்பை சொல்லிவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியாக இயங்கத்தொடங்கியதும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்தார். இப்போது தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இணைத்தது மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழகம் சீரழிந்து விட்டதாகவும், அப்போது உடனிருந்த பாவத்துக்காக பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். இது எப்படி இருக்கு?

Tags:    

Similar News