உள்ளூர் செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எர்ணாவூர் நாராயணன் வாழ்த்து
- ஒடிசா மாநிலம் ராய்ரங்பூரில் பிறந்து முதலில் அரசுப் பணியில் இளநிலை உதவியாளர், பின்னர் ஆசிரியர் பணியாற்றி அரசியலுக்குள் நுழைந்தவர் திரவுபதி முர்மு.
- உள்ளாட்சி பிரதிநிதியாக, எம்.எல்.ஏ., எம்.பி.யாக, அமைச்சராக, ஆளுநராக அரசியலில் உச்சம் தொட்ட திரவுபதி முர்மு இன்று தேசத்தின் ஜனாதிபதி அரியாசனத்தில் அமருகிறார்.
சென்னை:
சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாட்டின் வரலாற்றில் பழங்குடி இனப்பெண் ஒருவர் ஜனாதிபதியாவது இது முதல் முறை.
ஒடிசா மாநிலம் ராய்ரங்பூரில் பிறந்து முதலில் அரசுப் பணியில் இளநிலை உதவியாளர், பின்னர் ஆசிரியர் பணியாற்றி அரசியலுக்குள் நுழைந்தவர் திரவுபதி முர்மு. உள்ளாட்சி பிரதிநிதியாக, எம்.எல்.ஏ., எம்.பி.யாக, அமைச்சராக, ஆளுநராக அரசியலில் உச்சம் தொட்ட திரவுபதி முர்மு இன்று தேசத்தின் ஜனாதிபதி அரியாசனத்தில் அமருகிறார்.
இன்று நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்கும் திரவுபதி முர்முவுக்கு சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.