உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே ரோட்டில் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனத்தில் மோதி தேவகோட்டை நகராட்சி ஊழியர் பலி

Published On 2022-09-04 06:07 GMT   |   Update On 2022-09-04 06:07 GMT
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுங்குராம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் விஜய்.
  • விபத்துக்கு ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் தான் காரணம் என கூறப்படுகிறது.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுங்குராம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் விஜய் (வயது25). இவர் தேவகோட்டை நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வாரம் ஒரு முறை தனது வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று அவர் மதுரை வந்து விட்டு திருமங்கலம் நோக்கி சென்றார். அப்போது மறவன்குளம் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு சரக்கு வேன் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தது.

பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ரோட்டில் நின்ற சரக்கு வாகனம் தெரியாததால் விஜய் சென்ற மோட்டார் சைக்கிள் சரக்கு வாகனத்தின் பின் பகுதியில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் முன்பக்க சக்கரம் சரக்கு வாகனத்தில் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் விஜய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறி பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக்கு ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் தான் காரணம் என கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் சரக்கு வாகன டிரைவரின் பொறுப்பற்ற செயல்தான் இந்த விபத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக திருமங்கலம் டவுன் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News