உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 153 ஏரிகள் முழுவதும் நிரம்பியது

Published On 2023-11-27 08:03 GMT   |   Update On 2023-11-27 08:03 GMT
  • பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
  • கடந்த 24 மணி நேரத்தில் 13 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக விட்டு, விடடு கனமழை கொட்டுகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

இதில் 153 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 13 ஏரிகள் முழு கொள்ள ளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 164 ஏரிகள் 75 சதவீதமும், 226 ஏரிகள் 50 சதவீதமும், 86ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருக்கிறது. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News