search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரிகள்"

    • நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
    • 33 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக 174 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 215 ஏரிகள் 75சதவீதத்துக்கு மேலும், 241 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 246 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 33 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. இந்த தகவலை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • கடந்த 24 மணி நேரத்தில் 13 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக விட்டு, விடடு கனமழை கொட்டுகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

    இதில் 153 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 13 ஏரிகள் முழு கொள்ள ளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் 164 ஏரிகள் 75 சதவீதமும், 226 ஏரிகள் 50 சதவீதமும், 86ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருக்கிறது. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 3 நாட்களாக நீடிக்கும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 8895 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளவில் 75 சதவீதம் ஆகும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டிவருகிறது. இன்று காலையும் கனமழை கொட்டியது. கடந்த 3 நாட்களாக நீடிக்கும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. இதில் 2755 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080 மி.கனஅடி. இதில் 692மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 197 கனஅடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 3138 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு இன்று காலை நீர்வரத்து 451 கனஅடியாக அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் மீண்டும் எட்டி உள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஏரியில் இருந்து 162 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

     

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1874 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 210 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 436மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 20 கனஅடி தண்ணீர் வருகிறது.10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • 297 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.
    • வாயலூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி 2170 கன அடி நீர் உபரி வெளியேறி வருகிறது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 909 ஏரிகளில் 140 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    மேலும் 161 ஏரிகள் 75 சதவீதமும், 221 ஏரிகள் 50 சதவீதமும், 297 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. இதேபோல் செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களில் செல்லக்கூடிய பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட வாயலூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி 2170 கன அடி நீர் உபரி வெளியேறி வருகிறது.

    • பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி செல்கிறது.

    அதேபோல காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு முருகன் காலனி பல்லவர் மேடு போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    மழையின் காரணமாக உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம்ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல்சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    காஞ்சிபுரம் பகுதியில் மொத்தம் 381- ஏரிகள் உள்ளன. இதில் ஏரிகள் முழுவதும் நிரம்பியது. 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு இந்த பயன்பாட்டுக்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, உத்திரமேரூர், மணிமங்கலம், போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    • 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
    • 134 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.

    காஞ்சிபுரம்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டிவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்ந 2 நாட்களாக பலத்த மழை பெய்கிறது. நேற்று இரவு முழுவதும் விட்டு,விட்டு பலத்த மழை கொட்டியதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஒரே நாளில் 39 ஏரிகள் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் 149 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 233 ஏரிகள் 50 சதவீதம், 294 ஏரிகள் சதவீதத்துக்கு மேலும், 134 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன.

    இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக இந்த ஏரிகள் நிரம்பி வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1022 ஏரிகளில் தற்போது வரை 38 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பக்கம் ஏரிக்கும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 23 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.5 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் பராமரிப்பு பணி நடைபெற்றது. மதகுகள் தண்ணீர் திறப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டியவுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    • பாசன நீர் வழங்கும் ஏரிகளை போர்க்கால அடிப்படையில் புனரமைக்க வேண்டும்.
    • விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

    திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் முடிகொண்டான் ராஜா, மாநில செயலாளர் உலகநாதன், நிர்வாகிகள் அரவிந்தசாமி, வில்லு ஜெகதீஷ், பவுன்ராஜ், ஜெயபால், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், காவிரி, கல்லணை, வெண்ணாறு ஆகியவைகளின் பாசன வாய்க்கால், இதனுடைய பாசன நீர் வழங்க கூடிய ஏரிகள் போர்க்கால அடிப்படையில் புனரமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் முந்திரி, பலா, சின்ன வெங்காயம், துவரை போன்ற பயிர்கள் மற்றும் கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களை பயிர் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-23 -ம் ஆண்டில் நெல், உளுந்துக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

    அரியலூர் மாவட்டம் தூத்தூர், தஞ்சை மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவுடன் கூடிய அணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கங்கள் மற்றும் 336 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இப்பணிகளை ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை பகுதிகளில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்புகளால் முழுமையாக நிரம்பாத கண்மாய்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    அருப்புக்கோட்டை,

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகி ன்றன. இதனால் மாநிலம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை ஓரளவுக்கே கை கொடுத்துள்ளது. போதிய அளவு மழை பெய்யாவிட்டாலும் அவ்வப்போது பெய்யும் திடீர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீத அளவில் தண்ணீர் நிரம்பியுள்ளன.

    ஆனால் அருப்புக்கோட்டையில் விவசாயத்திற்கு அங்குள்ள பெரிய கண்மாய், செவல் கண்மாய், தூமைக்குளம் கண்மாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த கண்மாய்களில் எந்தவித சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.

    இதனால் கண்மாயில் நீர் தேக்கப்படும் அளவு வெகுவாக குறைந்து ள்ளது. இதை தவிர தற்போது கண்மாய் முழுவதும் 75 சதவீதம் ஆகாய தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தாலும் போதிய தண்ணீர் கண்மாய்களில் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது.

    இதுகுறித்து அந்தப்ப குதி விவசாயிகள், பொதுமக்கள் பலமுறை அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்ய வைத்து இறைவன் வரம் கொடுத்தாலும் அதிகாரிகள் தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப்பகதியினர் அதிருப்தியுடன் தெரிவித்த னர்.

    • பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப்ப ணித்துறை, உள்ளாட்சி த்துறை கட்டுப்பாட்டில் ஏரிகள் உள்ளன. பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.ஆனால் திண்டிவனம் அய்யன் தோப்பு அருகே உள்ள தாங்கல் ஏரியில் வண்டல் மணல் அள்ளுவது தொடர்கதையாக உள்ளது. பொக்லைன் மூலம், இரவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு உத்தரவை மீறி, நாளுக்கு நாள் மண் திருட்டு, அதிகரித்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணனிடம் கூறுகையில் தாங்கல் ஏரியில் மணல் அல்லுவது பற்றி புகார் வந்துள்ளது. உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .மேலும் அனுமதி இன்றி மணல் அள்ளுவதைப் பற்றி புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

    • மணல் கொள்ளையை தடுத்திட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • சமுத்திர ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் மாவட்ட தலைவர் சேவையா தலைமையில் நடைபெற்றது. துணை செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த கூட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்திடவும், குவாரிகளை முறையாக செயல்படுத்தவும் கண்காணிப்பு குழு அமைப்பதுடன், அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வருகிற 19-ந்தேதி தஞ்சை ரெயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,

    சமுத்திர ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×