search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 ஏரிகள் முழுவதும் நிரம்பியது
    X

    காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 ஏரிகள் முழுவதும் நிரம்பியது

    • 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
    • 134 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.

    காஞ்சிபுரம்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டிவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்ந 2 நாட்களாக பலத்த மழை பெய்கிறது. நேற்று இரவு முழுவதும் விட்டு,விட்டு பலத்த மழை கொட்டியதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஒரே நாளில் 39 ஏரிகள் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் 149 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 233 ஏரிகள் 50 சதவீதம், 294 ஏரிகள் சதவீதத்துக்கு மேலும், 134 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×