உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
- பூஜைக்கு முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.
- சுமங்கலி பூஜையில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுமங்கலி பூஜை நேற்று நடைபெற்றது.
பூஜைக்கு முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து பெண்கள் திரளாக கலந்து கொண்டு சுமங்கலி பூஜை நடத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.