உள்ளூர் செய்திகள்

சென்டிரல்-அரக்கோணம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2022-06-06 03:07 GMT   |   Update On 2022-06-06 03:07 GMT
  • சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • சென்டிரல்-திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல்-அரக்கோணம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 8-ந்தேதிகளில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் 8-ந்தேதிகளில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரல்-திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் 8-ந்தேதிகளில் திருவள்ளூர்-திருத்தணி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம்-சென்டிரல் இடையே காலை 10 மணி, 11.10 மணி மற்றும் மதியம் 12 மணி, 1.50 மணிக்கும், திருத்தணி-சென்டிரல் இடையே காலை 10.15 மணி மற்றும் மதியம் 12.35 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை மற்றும் 8-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரெயில்களுக்கு பதிலாக கடம்பத்தூர்-சென்டிரல் இடையே காலை 10.25 மணி, 11.35 மணி, மதியம் 1.25 மணிக்கும், திருவள்ளூர்-சென்டிரல் இடையே காலை 11.10 மணி, மதியம் 12.35 மணிக்கும், அரக்கோணம்-சென்டிரல் இடையே மதியம் 1.50 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரெயில் மேற்கண்ட தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News