search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Railway"

    • ரெயில் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் வழக்கத்தை விட 10-15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
    • மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரெயில் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே மெயில் ரெயில் (எண். 12623/12624) தினமும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ரெயில் ஜூலை 15 முதல் சென்ட்ரலில் இருந்து வழக்கமாக இரவு 7.45 மணிக்கு பதிலாக இரவு 7.30 மணிக்கு (15 நிமிடங்கள் முன்பு) புறப்பட்டு மறுநாள் காலை 11.30 பதிலாக காலை 11.20 மணிக்கு (10 நிமிடங்கள் முன்பு) திருவனந்தபுரம் சென்றடையும்.

    இந்த ரெயில் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் வழக்கத்தை விட 10-15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரெயில் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

    அதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து செல்லும் கேரளா அதிவிரைவு ரெயில் (எண்.12623) ஜூலை 15 முதல் வழக்கமாக பிற்பகல் 12.30 மணிக்கு பதிலாக (15 நிமிடங்கள் முன்பு) பிற்பகல் 12.15 மணிக்கு புறப்படும்.

    திருச்சூர் வரையுள்ள நிறுத்தங்களில் 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும் இந்த ரெயில் அங்கிருந்து டெல்லி வரை வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

    சென்னை சென்ட்ரல்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே இயங்கும் அந்தமான் விரைவு ரெயிலில் (எண்.16031/16032) மார்ச் 21 முதலும், சென்ட்ரல்-லக்னோ விரைவு ரெயில்கள் (எண்.16093/16094) மார்ச் 23 முதலும் தலா ஒரு குளிர் சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை :

    சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து 4 வாரங்கள் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரெயில்கள் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணிகளின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஏ.சி. மின்சார ரெயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஏ.சி. ரெயில் விடுவது தொடர்பாக ரெயில்வே முடிவு செய்தது. முதலில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி.மின்சார ரெயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

    இதையடுத்து தலா 12 ரெயில் பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ரெயில்வே வாரியம் ஒதுக்கியது.

    ஏ.சி.ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி ஐ.சி.எப்.பில் நடந்து வருகிறது. கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏ.சி.மின்சார ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-


    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும். அதன் பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.சி. மின்சார ரெயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடக்கிறது.
    • தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் முழுமையாக ரத்து.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே 13-ந்தேதி (இன்று) முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40149) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40150) இன்று முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40419) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40420) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே, இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

    சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.

    இந்த புதிய சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் ஒரு பயணி "மலர்கள் கேட்டேன்" பாடலைப் பாடி மகிழ, அவரது தோழி நாட்டியக் குறிப்புகளுடன் அசைவுகள் கொடுக்கும் வீடியோ ஒன்றை தென்னிந்திய ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பேருந்து, ரெயில், மெட்ரோவில் பயணம் செய்யும் போது கூட சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்கவும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் வந்தே பாரத் ரெயிலில் கர்நாடக இசை பாடல் பாடுவது பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காதா? இதே போல கிராமிய, கானா பாடல்களை பாட ரெயில்வே நிர்வாகம் அனுமதிக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
    • சென்னை புறநகர் ரெயில் சேவையில் குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ரெயில் நிலையங்களில் அமைக்கப் பட்டுள்ள மலிவு விலை மருந்தகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    அதே போல தமிழகத்தில் 168 ரெயில் நிலையங்களில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' விற்பனை அரங்குகள் திறக்கப்பட்டன. உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டங்களில் முக்கிய விளைபொருட்களை ரெயில் பயணிகளுக்கு தரமாகவும் குறைவான விலையில் கிடைக்கும் வகையிலும் இந்த கடைகள் செயல்படும்.

    சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ரெயில் நிலையங்களில் அந்த பகுதியில் உள்ள முக்கியமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் பல ரெயில் நிலையங்களில் ஒரு பொருள் அங்காடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வேயில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் சாதாரண ரெயில் பெட்டிகள் முழுமையாக நீக்கப்பட்டு அனைத்தும் நவீன பெட்டிகளாக மாற்றப்படுகிறது. சென்னை-கடற்கரை-எழும்பூர் 4-வது ரெயில் பாதை பணிகள் ஜூன் மாதத்தில் முடிவடையும். அதன் பின்னர் கடற்கரை-வேளச்சேரி வரை மின்சார ரெயில் சேவை தொடங்குகிறது.

    சென்னை புறநகர் ரெயில் சேவையில் குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக 2 புறநகர் ரெயில்கள் மே மாதம் முதல் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதனால் பொதுமக்களின் வசதிக்காக நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

    பராமரிப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கடற்கரையில் இருந்து இரவு நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.
    • கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

    மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
    • மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    • மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து.
    • பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.

    மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல, பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12658) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×