உள்ளூர் செய்திகள்
மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
- 15 வயது சிறுமியிடம் வீரராகவன் என்பவர் காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீரராகவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவையாறு:
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகாவில் ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமியிடம் கல்லணை அருகே பாதரக்குடியை சேர்ந்த துரைராஜ் மகன் வீரமணி என்ற வீரராகவன் (வயது22) காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் மாணவி பள்ளிக்கு பஸ்சில் சென்ற போது மாணவியின் தோள்பட்டையில் கையை வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீரராகவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.