உள்ளூர் செய்திகள்

சிறுமியின் கருமுட்டை விற்பனை சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு

Published On 2022-08-14 09:17 GMT   |   Update On 2022-08-14 09:17 GMT
  • ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக 8 முறை கருமுட்டை பெறப்பட்டது.
  • பின்னர் இந்த கருமுட்டைகள் பல லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சேலம்:

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக 8 முறை கருமுட்டை பெறப்பட்டது. பின்னர் இந்த கருமுட்டைகள் பல லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த செயலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் யவை? யவை? என அதிகாரிகள் விசாரணை நடத்தி கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்படும் என தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.

அதன்படி சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பிருந்தாவன் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின்ஸ்கேன் சென்டர் கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி 30 கால அவகாசம் 30 நாட்கள் சுகாதார துறை வழங்கியது.

இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்ததும் சேலம் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன் மற்றும் அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு நோயாளிகள் இல்லை என்பதை உறுதி செய்த பின் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News