உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

அய்யலூரில் பள்ளிக்குள் புகுந்து பணம் திருட்டு

Published On 2022-07-06 05:46 GMT   |   Update On 2022-07-06 05:46 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பள்ளிக்குள் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.28ஆயிரம் பணத்தை திருடிச்சென்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அதன்பின்னர் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பள்ளிக்குள் இருந்த பீேராவை திறந்து அதிலிருந்த ரூ.28ஆயிரம் பணத்தை திருடிச்சென்றனர்.

இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணம் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் திருடுபோன நிலையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளியில் கொள்ளைபோனது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Tags:    

Similar News