உள்ளூர் செய்திகள்

மணல் டெண்டர் உரிமம் பெற்று தருவதாக கூறி மோசடி

Published On 2022-07-19 10:15 GMT   |   Update On 2022-07-19 10:15 GMT
  • 3 தவணைகளாக பணத்தை அவருடைய வீட்டிற்கு எடுத்து சென்று ரூ.25 லட்சம் மற்றும் 30 கிராம் தங்க நகைகளை கொடுத்தேன்.
  • மணல் டெண்டர் உரிமம் பெற்று தராததால் என்னிடம் இருந்து பெறப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும்.

மதுக்கூர்:

சென்னை ரெங்கநாதன் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 34). இவர் சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு பட்டுக்கோட்டையை சேர்ந்த நண்பர் மூலம் பட்டுக்கோட்டை கோட்டைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகி எனக்கு மணல் டெண்டர் உரிமம் பெற்று தருவதாக கூறி பணம் கேட்டார். அதற்கு நான் 3 தவணைகளாக பணத்தை அவருடைய வீட்டிற்கு எடுத்து சென்று ரூ.25 லட்சம் மற்றும் 30 கிராம் தங்க நகைகளை கொடுத்தேன். ஆனால் மணல் டெண்டர் உரிமம் பெற்று தரவில்லை. எனவே என்னிடம் இருந்து பெறப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News