உள்ளூர் செய்திகள்

கோவை முதியவரிடம் ரூ.53 லட்சம் மோசடி

Published On 2023-11-08 08:59 GMT   |   Update On 2023-11-08 08:59 GMT
  • வட்டியும், அசல் தொகையையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறார்.
  • புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை அருகே உள்ள சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுகுமார்(வயது53). சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

இவர் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ரகுநாத். ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார்.

எனக்கு நட்பு ரீதியாக அவரது பழக்கம் கிடைத்தது. கடந்த 2016-ம் ஆண்டு அவர் தனது தொழிலை விரிவு படுத்த வேண்டும். அதற்கு வங்கி கடனை அடைக்க வேண்டும் என பணம் கேட்டார்.

இதனை நம்பிய நான் அவரிடம் ரூ.53 லட்சம் கொடுத்தேன். ஆனால் அதற்கு அவர் சில மாதங்கள் வரை வட்டி கொடுத்தார்.

அதன்பின்பு வட்டியும், அசல் தொகையையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தனது வீட்டை விற்று கடனை அடைத்து விடுவதாக தெரிவித்தார்.

ஆனால் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுக்கவில்லை. மேலும் ரகுநாத் வீட்டை விற்க அவரது மனைவி சுசித்ராவிடம் பவர் பத்திரம் எழுதி கொடுத்து விட்டு வெளிநாடு செல்ல திட்டமிடுவதாக தெரிகிறது.

எனவே ரூ.53 லட்சம் மோசடி செய்த ரகுநாத் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ரகுநாத், அவரது மனைவி சுசித்ரா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News