உள்ளூர் செய்திகள்

தீ விபத்தால் வீடு இழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு நிவாரணம்

Published On 2023-05-05 09:52 GMT   |   Update On 2023-05-05 09:52 GMT
  • கூரை வீடு மின் கசிவால் தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.
  • ரூ.5 ஆயிரம் நிவாரணம், காய்கறி மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில் கூலித் தொழிலாளியான நடேசன் என்பவரின் கூரை வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகிவிட்டது.

இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் படி, பேராவூரணி தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ நேரில் சென்று பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிவாரணத் தொகையும், காய்கறி மற்றும் அரிசி வழங்கினார்.

இந்நிகழ்வில் கட்டையங்காடு ஒன்றிய கவுன்சிலர் கவிதா செல்வ குமார், சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராசு, முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன் கூட்டுறவு சங்க தலைவர் வே.கூத்தலிங்கம், இளைஞரணி செயலாளர் கே.எஸ்.வினோத் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் எஸ்.சத்யராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News