உள்ளூர் செய்திகள்

2 மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

அரிய வகை உயிரினத்தை பாதுகாத்த 2 மீனவர்களுக்கு ஊக்கத்தொகை

Published On 2022-08-19 09:11 GMT   |   Update On 2022-08-19 09:11 GMT
  • தொண்டியில் அரிய வகை உயிரினத்தை பாதுகாத்த 2 மீனவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
  • இந்த மீனவர்கள் முதன்முறையாக கடல் பசுவை பார்த்துள்ளனர் என்பதும் பார்த்த உடனே கடலில் உயிருடன் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவ சகோதார்களாகிய துளசிராமன், ஹரிகரசுதன் ஆகிய மீனவர்களுடைய வலையில் அரிய வகை கடல் உயிரினமான கடல் பசு சிக்கியது. கடல் புற்களை மட்டுமே உணவாகக் கொண்டு கடலில் உயிர்வாழும் இந்த அரிய வகை உயிரி னத்தை பாதுகாக்கும் வகையில் தங்களது மீன் பிடி வலைகளை அறுத்து கடல் பசுக்களை கடலில் விட்டனர்.

இதை படம் பிடித்து தொண்டியில் உள்ள கடல் பசு பாதுகாப்பு அமைப்பினர் மன்னார் வளைகுடா, தலைமன்னார், கட்சத்தீவு, குஜராத் மற்றும் அந்தமான் தீவுகளில் கடல் பசு ஜான்சன் நேரு பிரபாகரன் ஆகிய கடல் பசு ஆராய்ச்சியாளர்களின் தலைமையில் இயங்கும் தொண்டி பகுதியில் உள்ள சின்மயா கானேகர், ஸ்வேதா அய்யர், பிரியம்பதா ரௌத்ராய், பிராட்ஜி ஹட்கர் ஆகியோரது மேற்பார்வையில் இயங்கி வரும் கடல் பசு பாதுகாப்பு அமைப்புக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரால் கடல்பசுவை பாதுகாத்த மீனர்கள் துளசிராமன், ஹரிகரசுதனுக்கு தலா 10 ஆயிரம்பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த மீனவர்கள் முதன்முறையாக கடல் பசுவை பார்த்துள்ளனர் என்பதும் பார்த்த உடனே கடலில் உயிருடன் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News