உள்ளூர் செய்திகள்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் திரவம், சீருடைகள் வழங்கல்
- தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் திரவம், சீருடைகள் வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
- கிளப் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் சார்பில் கை கழுவுவதில் ஏற்படும் நோய்த்தடுப்பு முறையை மாணவ-மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் கை கழுவும் திரவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிளப் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார். பட்டய தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா முன்னாள் தலைவர்கள், கண்ணன், சிவராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நலிவடைந்த மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.