உள்ளூர் செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் கேக் வெட்டினார்கள்.

செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி 25-வது ஆண்டு விழா

Published On 2022-07-02 07:03 GMT   |   Update On 2022-07-02 07:03 GMT
  • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி 25-வது ஆண்டு விழா நடந்தது.
  • விழாவில் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் 25-வது ஆண்டு விழா தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடந்தது. முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

கல்லூரியில் 25 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணி புரியும் காளிமுத்து கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறுகையில், ஏழை, எளிய மாணவர்களுக்கும் உயர் கல்வி கிடைக்க வேண்டும். அந்த குடும்பத்தின் பொருளாதார உயர வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் தந்தை டாக்டர் இ. எம். அப்துல்லா ஆரம்பித்த இந்த கல்லூரி 25-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்கலைக்கழக அளவில் சாதனை புரியும் மாணவ, மாணவிகளுக்கு நிறுவனர் டாக்டர் அப்துல்லாவின் பெயரில் ஆண்டுதோறும் தங்கப் பதக்கம், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரியில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடு களிலும், வெளி மாநிலங்க ளிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களில் வேலை செய்து கை நிறைய சம்பளம் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

விழாவில் பேராசிரியர்கள், அலுவலக பணியா ளர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News