உள்ளூர் செய்திகள்

டிரைவரிடம் ரூ.76ஆயிரம் ேமாசடி

Published On 2022-09-07 07:57 GMT   |   Update On 2022-09-07 07:57 GMT
  • ரூ.25 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி டிரைவரிடம் ரூ.76ஆயிரம் ேமாசடி செய்தனர்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சரவணகுமார் (வயது38). கடந்த 21-ந் தேதி இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தனியார் நிறுவனத்திலிருந்து வந்த குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூ.25 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கதவல் இருந்தது.

இதையடுத்து அந்த எண்ணுக்கு சரவணகுமார் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய நபரிடம் தனக்கு லாட்டரி விழுந்திருப்பதாக வந்த குறுஞ்செய்திகுறித்து கேட்டார். அப்போது அவர்கள் பரிசு தொகையை பெற குறிப்பிட்ட வங்கி கணக்கு பணம் அனுப்ப வேண்டும் என தெரி வித்ததாக கூறப்படுகிறது.

இதைநம்பி சரவணக் குமார் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் மொத்தமாக ரூ.76,500 அனுப்பி வைத்து உள்ளார். பணத்தினை பெற்றுக் கொண்ட நபர்கள் மீண்டும் பணம் கேட்டு உள்ளனர். இதனால் சரவணக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் விசாரித்ததில் குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பரிசுப் பொருட்கள் வழங்கப் படுவதில்லை என்று தெரிய வந்தது.

இது குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் சரவணக்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News