உள்ளூர் செய்திகள்

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

Published On 2023-01-09 06:15 GMT   |   Update On 2023-01-09 06:15 GMT
  • மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
  • புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி தனுஷ்யா (வயது 26). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமபவத்தன்று ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பாலமுருகன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தனுஷ்யா மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தனுஷ்யா செம்பட் டிவிடுதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.





Tags:    

Similar News