உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் அருகே பொது சுகாதார மைய கட்டுமான பணி-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- பொது சுகாதார மைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
எட்டயபுரம் அருகே கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 56.40 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார மைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், கீழஈரால் ஊராட்சிமன்ற தலைவர் பச்சைப்பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், எட்டயபுரம் பேரூராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயமுத்து, கிளைச் செயலாளர் சண்முகவேல், இளைஞர் அணி மகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.