உள்ளூர் செய்திகள்

கட்டிங் மிஷின் எந்திரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு

Published On 2023-08-02 10:11 GMT   |   Update On 2023-08-02 10:11 GMT
  • மிஷினை இயக்கியபோது திடீரென்று அதில் கோகுல் சிக்கி கொண்டார்.
  • அடிபட்டு காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

தருமபுரி மாவட்டம் அரூர் கூச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கோகுல் (வயது29). இவருக்கு திருமணமாகி வைஷாலி என்ற மனைவி உள்ளார்.

இவர் ஓசூர் அரசனட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் அரசனட்டியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்ற கோகுல், அங்குள்ள ஒரு கட்டிங் மிசின் பழுதாகி நீண்டநாட்களாக செயல்படாமல் கிடந்ததை பார்வையிட சென்றார். அப்போது அந்த மிஷினை இயக்கியபோது திடீரென்று அதில் கோகுல் சிக்கி கொண்டார். இதில் அடிபட்டு காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வைஷாலி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் தனது கணவருக்கு சாவுக்கு காரணமானவர்கள் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் அன்பழகன், மேலாளர் ஜெகநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News